சிறப்பு நற்செய்தி மாதம் - இன்றைய இறை சிந்தனை | October 15

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் மனிதர்கள் எப்படி கடவுளின் திட்டத்திற்கு எதிராகச் சென்று தங்களையே பாவத்தில் மாசுபடுத்திக்கொண்டார்கள் என்பதை உரோமையருக்கு எடுத்துரைக்கின்றார். அவர்கள் பொய்மையையும் தீமையையும் நம்பி, உலகப் பொருள்களை கடவுளாக்கி உண்மைக் கடவுளை மறந்துள்ளார்கள் எனக் குறிப்பிடுகிறார். அவர்கள் தங்கள் பாவங்களினால் கடவுளின் கோபத்திற்கு தகுதியுள்ளவர்களாக இருந்தபோதிலும், கடவுள் மனித குலத்தை அன்புசெய்து, மீட்க கிறிஸ்துவ வழியாக தயாரானார். 

நம்பிக்கையில் ஒவ்வொருவரின் இதயத்தைத் திறந்து அவர்களுக்கு மீட்பின் செய்தி கொடுக்கக்கூடிய சக்திக் கொண்டதுதான் பெறப்பட்ட, கொடுக்கப்பட்ட இந்த நற்செய்தி. இந்த நற்செய்தி அறிவிப்பை யாராலும் தடுக்கமுடியாது. இது உலகின் எல்லைவரை கட்டுக்கடங்காமல் தொட்டு தொடரக்கூடியது. பதிலுரைப்பாடலில் கூறுவதுபோல: கடவுளின் மாட்சி உலகின் கடைஎல்லைவரை எட்டுகிறது. 

நற்செய்தியில் பரிசேயர்கள் வெளிப்பறத் தூய்மையைப் பார்த்து, இயேசுவில் ஒளிரும் உலகத்திற்கான மீட்பின் செயலைக் கண்டுணர மறந்துவிடுகிறனர். இயேசுவை பரிசேயர் விருந்துண்ண அழைக்கிறார். இயேசு உணவருந்தும்முன் அவர்கள்போல கைகளைத் தூய்மை செய்யாததால் பரிசேயர் அவமானத்துக்குள்ளாகிறார். 

நம்முடைய சடங்குகள் சம்பிரதாயங்கள் பாரம்பரியம் எல்லாமே முதன்மையானதல்ல, மாறாக நல்லவை செய்வதற்கும் அன்பு செய்வதற்குமான ஒரு வழிகோலாகத் தான் இருக்கவேண்டும் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். கடவுள் அனைவரையும் இந்த பந்தியில் அமர்வதற்கு அழைக்கிறார். அதற்காக தன் உயிரையும் கொடுக்கிறார். உரோ 1:16-25, லூக்கா 11:37-41

 

Add new comment

1 + 1 =