சிறப்பு நற்செய்தி மாதம் - இன்றைய இறை சிந்தனை October 14

நற்செய்தி அறிவிப்பின் மாபெரும் சக்தியை விளக்கிக் கூறுகிறது. அறிவிக்கப்பட்ட இறைவார்த்தையானது மீட்பின் செய்தியை கருத்தரித்துள்ளது. எனவே நாம் இறைவார்த்தைக்கு செவிமடுக்கத் தயாராக இருக்கவேண்டும். எனவே பதிலுரைப்பாடல் சொல்கிறது: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக கடவுளின் வார்த்தையை கேட்பீர்களாக.

முதல் வாசகத்தில், உரோமையிலுள்ள கிறிஸ்தவர்களைச் சந்திக்கிறார். புற இனத்தவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க அவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். கிறிஸ்துவின் நற்செய்தியானது யாருக்கும் தனிப்பட்டவிதத்தில் கொடுக்கப்பட்டுள்ளதல்ல. மாறாக அனைவருக்கும் பொதுவானது. 

நற்செய்தி வாசகம் அந்நியர்கள் எவ்வாறு கடவுளோடு உறவில் உள்ளார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது. இயேசு இந்த தலைமுறையினரை பொல்லாதத் தலைமுறையென்று சாடுகிறார். காரணம் அவர்கள் கடவுளை நம்புவதற்கு அடையாளங்களையும் அறிகுறிகளையும் கேட்கிறார்கள். யோனாவின் அடையாளம் கடவுள் எவ்வாறு தம்மைவிட்டு தொலைவில் உள்ளவர்களை அன்புசெய்கிறார், அவர்களை எப்படி மன்னித்து ஏற்றுக்கொள்கிறார், அவர்கள் மனம் மாறுதல் வழியாக எவ்வாறு தங்கள் மீட்பைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதாகும். முதலில் கடவுளின் வார்தைக்கு கட்டுப்பட மறுத்த யோனா, அவரே அடையாளமாய் மாறுகிறார். 

இயேசுவும் தலைமுறைதோறுக்கும் அடையாளமாக மாறுகிறார். அவருடைய வருகை இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமல்ல, எல்லா இனத்தவருக்கும் மீட்பளிக்கும் செய்தி. இவருடைய வார்த்தையைக் கேட்டு மனமாற அழைக்கிறார். பிறஇனத்தவரான சேபா நாட்டு அரசியும், நினிவே மக்களும் கடவுளின் வார்த்தையைக் கேட்டு மனமாறினர். ஆனால் வாக்களிக்கப்பட்ட மக்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்கத் தயங்குகிறார்கள். 

இயேசுவின் இறப்பின் உயிர்ப்பினால் திருஅவை அனைவருக்கும் மீட்பளிக்கும் அருள்அடையாளமாக இருக்கிறது. திருஅவை எந்த பாகுபாடுமின்றி கிறிஸ்துவில் மீட்பு என்பதை அனைவருக்கும் அளிக்கிறது. துன்பத்தில் கிறிஸ்துவின் மீட்பளிக்கும் பாடுகளில் பங்குகொண்டு, உயிர்ப்பின் மாட்சியை உணர்ந்து பயணிக்கிறது. தம்முடைய திருமுழுக்கு வளர்ச்சியில் இயேசுவின் தாராளமான இரக்கத்தையும், மன்னிப்பையும் அவருடைய கனிகளையும் கண்டு அனுபவிக்கிறது.

உரோ 1:1-7, லூக்கா 11:29-32. 

Add new comment

16 + 4 =