திருத்தந்தை, நொபெல் இயற்பியல் விருது பேராசிரியர்கள் சந்திப்பு


An Image of Pope Francis

2018ம் ஆண்டின் நொபெல் இயற்பியல் விருது பெற்ற பேராசிரியர்கள், ஜெரால்ட் மொரூ (Gérard Mourou) அவர்களும், டோனா ஸ்டிரிக்லாண்ட் (Donna Strickland) அவர்களும், தங்களின் வாழ்க்கைத் துணைவர்களுடன், ஏப்ரல் 12, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினர். 

சீரொளி இயற்பியல் (laser physics) துறையில், இவர்கள் ஆற்றிய பணிக்காக, 2018ம் ஆண்டில், இயற்பியலுக்கு நொபெல் விருது அறிவிக்கப்பட்டது.

கானடாவைச் சேர்ந்த டோனா ஸ்டிரிக்லாண்ட் அவர்கள், கடந்த 55 வருடங்களில் முதன்முறையாக, நொபெல் இயற்பியல் விருதைப் பெற்ற பெண் என்ற சிறப்பை பெறுகிறார்.

1903ஆம் ஆண்டு மேரி க்யூரி அவர்களும், 1963ஆம் ஆண்டு மரியா கோபெர்ட் மேயர் அவர்களும், நொபெல் இயற்பியல் விருதைப் பெற்ற பெண்கள் ஆவர்.

(வத்திக்கான் செய்தி)

Add new comment

1 + 2 =