Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மரங்களையும் வீட்டினையும் பற்றி நம்மாழ்வார் சொன்னதென்ன?
Thursday, June 06, 2019
ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் பத்து மரங்கள் இருக்க வேண்டும். வீட்டின் முன் ஒரு வேப்ப மரமும், பக்கத்தில் ஒரு முருங்கை மரமும், பப்பாளி மரமும் இருக்க வேண்டும். குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரமும், பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரமும், எலுமிச்சை மரமும் இருக்க வேண்டும். அதன் நிழலில் ஒரு கறிவேப்பிலைச் செடி இருக்க வேண்டும். ஒரு நெல்லிச் செடியும் இருக்க வேண்டும். வேலியில் நான்கு இடத்தில் சீதா மரமும் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரமும் வைக்க வேண்டும். ஒரு மா மரமும் வைக்க வேண்டும். இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்கமாட்டார் என்கிறார் நம்மாழ்வார்.
Click to share
Add new comment