Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நாட்டின் சட்டங்களால் பயம் வெளியிடும் பெண்கள்...
Saturday, April 20, 2019
சவுதியின் சட்டங்களுக்கு பயந்து சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறிய வபா மற்றும் மஹா அல்லது சுபாய் என்ற இரண்டு சகோதரிகளுக்கு ஜார்ஜியா நாடு அடைக்கலம் வழங்க முன்வந்துள்ளது. சவுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான சட்ட திட்டங்களை தாங்கள் வெறுப்பதாகவும், தங்கள் இருவருமே தந்தை மற்றும் சகோதரர்களால் தாக்கப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேற தாகவும் கூறியிருக்கிறார்கள். உயிர் பயத்தில் அடைக்கலம் கேட்டு கதறிய அவர்களின் காணொளி சமூக வலைதளத்தில் பெருமளவில் பரவ, அந்த சகோதரிகளுக்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள் உதவ முன்வந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகளுக்கும் பத்திரமாக இருப்பதற்கும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறி ஜார்ஜியா அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Click to share
Add new comment