சுவிட்சர்லாந்தில்114 சிறார்களை துஸ்பிரயோகம் செய்த மருத்துவர் சிக்கினார்


Child abuse alerting image

ஸ்விட்சர்லாந்தில் பெர்ன்  மண்டலத்தில் தன்னிடம் சிகிச்சை பெற வந்த 114 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாக்கிய மருத்துவர் சிக்கியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க வலியுறுத்திய நீதிமன்றம் குறிப்பிட்ட அளவீடுகளை மீறினால் அந்த மருத்துவரை கைது செய்யலாம் என தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில் வியாழனன்று அவரது நடவடிக்கை காரணமாக அந்த மருத்துவரை கைது செய்ய நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்பொழுது 62 வயதான அந்த நபர் மீது சுமார் 114 சிறார்களை துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. நீதிமன்றம் மேலும் 33 வழக்குகளை அவரது பெயரில் சுமத்தப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வழக்கு நிரூபணமான  2014 ஆம் ஆண்டு அவரை கைது செய்வதற்கான கால அவகாசம் கோரப்பட்டது. தற்போது உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

Add new comment

4 + 4 =