Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திருத்தந்தை Pope Francis
ஆயர்கள் மாமன்றம் அளித்த நிறைவு - மூவேளை செப உரை
தூய ஆவியார் வழங்கும் தெளிந்து தேர்தல் என்ற கொடை, இம்மாமன்றத்தின் வழியே, திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ளது – திருத்தந்தையின் மூவேளை செப உரை
ஆண்டின் பொதுக்காலம் 30ம் ஞாயிறு வழிபாட்டிற்கு வழங்கப்பட்ட வாசகங்களையும், இஞ்ஞாயிறன்று நிறைவுக்கு வந்த 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார்.
அக்டோபர் 28, ஞாயிறு, காலை 10 மணிக்கு, ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவுத் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நடத்திய திருத்தந்தை, இத்திருப்பலிக்குப் பின், வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கியபோது, இஞ்ஞாயிறு முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியா கூறியுள்ள நம்பிக்கை, இன்றைய மக்களுக்கும் பொருத்தமாக உள்ளதென்று கூறினார்.
உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து திருத்தந்தை மகிழ்வு
கடந்த சில வாரங்கள் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றம், கடினமான பணியாக இருந்தாலும், நம்பிக்கையூட்டும் விளைவுகளை உருவாக்கியுள்ளது என்பதை, திருத்தந்தை தன் உரையில் மகிழ்வோடு குறிப்பிட்டார்.
செவிமடுத்தல் என்ற சிறந்த பாடத்தை, ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொண்ட அனைவரும் கற்றுக்கொண்டனர் என்றும், தூய ஆவியார் வழங்கும் தெளிந்து தேர்தல் என்ற கொடை, இம்மாமன்றத்தின் வழியே, திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், திருத்தந்தை இவ்வுரையில் சுட்டிக்காட்டினார்.
உலக ஆயர்கள் மாமன்றத்தின் நோக்கம், ஓர் ஏட்டை வெளியிடுவது அல்ல என்று தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரின் உலகில் நிலவும் எதார்த்தங்களைக் காண்பதற்கு, மாமன்றம் நல்லதொரு தருணமாக அமைந்தது என்று கூறினார்.
ஆதாரம் வத்திக்கான் செய்திகள்
பதிப்பு Fr.Prakash SdC
Add new comment