Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பிரதமராக செயல்பட தடை – ராஜபக்ச மேல்முறையீடு
Friday, December 07, 2018
இலங்கையில் மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயல்பட விதிக்கப் பட்ட தடையை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடந்த அக்டோபர் 26-ம் தேதி நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவுக்கு பதவி ஏற்பு செய்து வைத்தார். .
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம், ராஜபக்ச பிரதமராக செயல்பட இடைக்கால தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மஹிந்த ராஜபக்ச உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார்
Click to share
Add new comment