வெனிசுவேலா மக்களுக்கு ஆதரவு – டிரம்ப் அறிவிப்பு


வெனிசுவேலா மக்களுக்கு அமெரிக்கா துணை நின்று ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்றாகும்.

 

அந்நாட்டில் அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் இறந்துவிட அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவி ஏற்றார். அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன.

 

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தேர்தலிலும் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்துதான் மதுரோ வென்றிருப்பதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

 

இந்த குழப்பங்களுக்கு பின்னணியில், கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் வெனிசுவேலா திண்டாடி வருகிறது.

 

மதுரோவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராட்டி வருகின்றனர்.

 

எதிர்க்கட்சித் தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

 

வெனிசுவேலா மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க, டிரம்ப் தலைமையிலான அரசு தீவிரவாதக் குழு என்று அறிவித்து வெனிசுலா அதிபர் மதுரோ பதிலடி வழங்கினார்.

 

இந்த பின்னணியில், வெனிசுலாவில் நடக்கும் போராட்டங்களுக்கு டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார்.

Add new comment

1 + 0 =