Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மேகேதாட்டு அணை – மத்திய அரசு பதில் மனு
காவிரி தொடா்பான அனைத்து மாநிலங்களிடமும் கருத்துக் கேட்ட பின்னரே மேதாட்டு அணை குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது
காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து, நீா் பங்கிடப்பட்டு வரும் நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாட்டு பகுதியில் அணைக்கட்ட கா்நாடகா அரசு முயற்சி செய்து வருகிறது.
கா்நாடகா அரசுக்கு சம்மதம் தெரிவிப்பதுபோல மத்திய அரசும் அணை குறித்து விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அனுமதியளித்தது.
மத்திய அரசுக்கும் எதிராக தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மத்திய அரசும், கா்நாடகாவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது.
மேகதாட்டு பகுதியில் அணைக்கட்டுவது தொடா்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மட்டுமே கா்நாடகாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரியில் அணைக்கட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்று இந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment