Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மசூத் அஸாரின் சகோதரரையும், மகனையும் கைது செய்து பாகிஸ்தான் அதிரடி
ஜெய்ஷ்- இ - முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அஸ்கரின் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூஃபையும், மகன் ஹமாத் அஸாரையும் பாகிஸ்தான் கைது செய்துள்ளது.
விசாரணை செய்வதற்காக அவர்கள் தடுத்து காவலில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் முகமதுவின் படை என்று பொருள்படும் ஜெய்ஷ்- இ - முகமது அமைப்பின் உறுப்பினர்கள் என்று ஐயம் ஏற்பட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ம் தேதி இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி மீது நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 40 படையினர் கொல்லப்பட்டனர்.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கட்டுப்பாட்டு எல்லை கோட்டை மீறி பரஸ்பரம் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தங்கள் மண்ணில் இருந்து செயல்பட பாகிஸ்தான் இடம் தருவதாக இந்தியா குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கைகள் வந்துள்ளன.
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர். எழுந்த பதற்றங்களுக்கு பின்னர், அமைதி ஏற்படுத்த பாகிஸ்தான் முனைப்போடு உள்ளதை பல செயல்பாடுகள் வழியாக வெளிப்படுத்தி வருகிறது.
Add new comment