பெண்களுக்கு ஆபத்தான இடம் வீடு – ஐநா ஆய்வு


பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு என்று ஐ.நா. நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

உலக அளவில் பெண்கள் தங்களின் கணவனாலும், தங்களின் பெற்றோர், சகோதரர்களால் ஆணவக் கொலையாலும், வரதட்சணைப் பிரச்சினையால் உறவினர்களாலும்  அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளதால், பெண்கள் வாழ்வதற்கு வீடு ஆபத்தான இடம் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 50 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் அனைவரும் கணவரால், அல்லது முன்னாள் கணவரால் அல்லது குடும்ப உறுப்பினர்கள், பெற்றோரால் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கும் தகவலாகும்.

 

2012 முதல் 2017ம் ஆண்டுக்குள் பெண்கள் கணவர்களால், குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்ட சதவீதம் அதிகரித்துள்ளது.

 

பெரும்பாலும் பெண்கள் கணவராலும், வரதட்சணைக் கொடுமையாலும், சாதிமாறி செய்யப்படும் திருமணத்தால் நிகழ்கின்ற ஆணவக் கொலையாலும் கொல்லப்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

3 + 12 =