Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பூமிக்கு 2 நிலவுகள் – விஞ்ஞானிகள் வழங்கும் ஆதாரம்
பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதாக கூறி ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். .
போலிஷ் வானியல் நிபுணர் காஸ்மிஜெர் கோர்ட்லெவ்ஸ்கி, 1961ம் ஆண்டில் நிலவுகள் குறித்து ஆய்வுகள் நடத்தினார்.
மேகங்களில் கடினமான 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை L4 மற்றும் L5 லகாரஞ்ச் புள்ளிகள் பூமியை சுற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கருத்து பரிமாற்றம் நீடித்து வந்த நிலையில், பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் ஆதாரத்துடன் உறுதி செய்துள்ளனர்.
இந்த 2 நிலவுகளும் தூசுகள் நிறைந்து காணப்படுவதாகவும், பூமியை சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மைல்கள் தொலைவில் சுற்றி வருவதாகவும் இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ராயல் ஆஸ்ட்ரானாமிக்கல் சொஸைட்டி இது தொடர்பாக மேலும் பல குறிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
சில நேரங்களில் சூரியனின் பிரதிபலிப்பு காரணமாக இந்த தூசி மேகங்கள் தோன்றியதாகவும், அதிலிருந்து தனி துகள்களை பிரதிபலிக்கும் சிதறடிக்கப்பட்ட ஒளி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மேகக்கூட்டங்கள் நிலைத்தன்மை, பூமியைச் சுற்றி வருதல், மற்றும் ஒளியைப் பிரதிபலித்தல் போன்ற காரணங்களால் இவை நிலவுகளாக தற்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
எனவே, இந்த நிலவுகளை முதன் முதலில் கண்டறிந்த போலந்து ஆராய்ச்சியாளர் கோர்ட்லெவ்ஸ்கியின் பெயரை இந்த நிலவுகளுக்கு சூட்டியுள்ளனர்.
Add new comment