பிறக்காமலேயே இறந்துவிட்ட குழந்தைகளுக்காக திருத்தந்தை செபம்


நவம்பர் 2ம் நாளில் மரித்த அனைத்து ஆன்மாக்கள் திருவிழாவின்போது, கருக்கலைப்பு செய்துவிட்டதால், பிறக்காமலேயே இறந்துவிட்ட குழந்தைகளுக்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் செபித்துள்ளார்.

 

பிறக்காமலேயே மரணம் எய்திய இந்த குழந்தைகளை “பாதுகாக்கும் தூதர்கள்” என்று கூறி திருத்தந்தை பிரான்சிஸ் செபித்துள்ளார்.

 

ரோம் நகருக்கு வெளிபுறத்தில் கல்லறைகளை மந்திரித்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் மரித்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும் செபித்தார்.

 

லௌரன்டினோ கல்லறையில் திருத்த்நதை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றினார்.

 

இந்த கல்லறையில் இறந்த குழந்தைகளுக்கும், பிறக்காமலேயே இறந்துவிட்ட குழந்தைகளுக்கும் சிறப்பு கல்லறை தோட்டம் உள்ளது.

 

அங்கு மலர்களை வைத்த திருத்தந்தை பிரான்சிஸ், சிறப்பு செபம் ஒப்புக்கொடுத்தார். 

Add new comment

9 + 8 =