பாகிஸ்தானை விட்டு வெளியேற அசியா பீபி திட்டம்


தெய்வநிந்தனை குற்றச்சாட்டில் மரண தண்டனை பெற்று, மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்ட அசியா பீபி  அந்நாட்டை விட்டு அவர் வெளியேற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.

 

அவருக்கு எதிராக பாகிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறையை தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக தெரிய வருகிறது.

 

தனது சகோதரிக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை. இந்நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர அசியாவுக்கு வேறு வழி இல்லை. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அசியாவுக்கு அடைக்கலம் தருவதாக தெரிவித்துள்ளன.

 

அசியாவின் கணவர் அவர்களது குழந்தைகளுடன் பிரிட்டனிலிருந்து பாகிஸ்தான் வந்திருக்கிறார். அசியாவின் விடுதலைக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்'' என்று அசியாவின் சகோதரர் ஜேம்ஸ் கூறியுள்ளார்.  

 

ராவல்பிண்டி உள்ளிட்ட பல இடங்களில் அசியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

 

அசியாவைப் பொது வெளியில் தூக்கிலிட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

 

இன்னொரு பக்கம், பாகிஸ்தான் அரசியலைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அசியா போன்ற அப்பாவிகள் பாதிக்கப்படமாட்டர்கள் என சமூக செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

 

வன்முறையாளர்கள் தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் அரசு தனது கடமையைச் செய்யும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Add new comment

2 + 1 =