நைரோபி உணவக தாக்குதல் – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு


கென்யாவின் தலைநகரான நைரோபியில் ‘டசிட் டி–2’ என்ற ஆடம்பர உணவக தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

 

101 அறைகள், உணவுவிடுதி, அலுவலக கட்டிடங்களை கொண்ட இந்த  உணவக வளாகத்திற்குள் நுழைந்த  அல் சபாப் பயங்கரவாதிகளில் ஒருவர் உடலில் கட்டி வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.

 

நாலாபுறமும் இருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

 

19 மணிநேரம் போராடி நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 

இந்த தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 14 பேர் கொல்லப்பட்டதாக முதலில் அறிவிப்பு வெளியானது.

 

தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். பலத்த காயங்களுடன் 28 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

 

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்ததற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Add new comment

6 + 1 =