நைஜீரியாவின் டெல்டா மாநிலத்தில் 5 அருட்சகோதரிகள் கடத்தல்


நைஜீரியாவின் டெல்டா மாநிலத்தில் 5 அருட்சகோதரிகளும், இன்னும் இரண்டு பேரும் துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.

 

இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கு கொண்ட பின், திரும்பி செல்கையில், இஸ்சேலி-யுகுவுக்கு மேற்கில் 25 மைல் தொலைவிலுள்ள அக்போருக்கு அருகில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

இந்த அருட்சகோதரிகள் வாகனத்தில் இருந்தபோது, துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். அந்த தாக்குதலின்போது இரண்டு அருட்சகோதரிகள் காயங்களுடன் எப்படியோ தப்பி வந்துள்ளனர்.

 

இந்த கடத்தல் சம்பவத்தை உறுதி செய்துள்ள டெல்டா மாநில காவல்துறை கண்காணிப்பாளர் முஸ்தபா முகமது, உளவுத்துறை கடத்தல்காரர்களை தேடி வருவதாக கூறியுள்ளார்.

 

கிறிஸ்தவர்களுக்கு மீதான வன்முறை சமீப காலங்களில் நைஜீரியாவில் அதிகரித்து வருகின்றன.

 

வடக்கில் போக்கோ ஹராம் தீவிரவாத குழுவும், தெற்கில் சிறிய வன்முறை கும்பல்களும் இயங்கி வருவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

Add new comment

5 + 2 =