நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி


நெதர்லாந்து  யுடெர்ட் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

நெதர்லாந்தின் கிழக்குப் பகுதியில் யுடெர்ட் நகரில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஹெலிகாப்டர்களை கொண்டு மீட்புப் பணிகள் நiடைபெற்றுள்ளன.

 

காயமடைந்தவர்கள் யுடெர்ட் பல்கலைகழகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதனை தீவிரவாத தாக்குதல் என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடும் நிலையில், இது பற்றி காவல்துறையினர் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரியின் நோக்கம் என்னவென தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. .

Add new comment

13 + 3 =