Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்
தூத்துக்குடி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை ஸ்டீபன் ஆன்றனி பிள்ளையை திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் யுவான் ஆம்பறோஸின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், வேலூர் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை பிள்ளையை புதிய ஆயராக நியமித்துள்ளார்.
திருச்சபை சட்டப்படி, ஆயர் பொறுப்பில் இருப்பதற்கு அதிகபட்ச வயதான 75-யை அடைந்தவுடன் ஆயர் அம்புறோஸ் பதவி விலகல் கடிதத்தை திருத்த்நதைக்கு அனு்பபியிருந்தார்.
ஜனவரி 17ம் தேதி ரோம் நகரில் புதிய ஆயரின் அறிவிப்பு வெளியானதாக இந்திய ஆயர்கள் பேரவை கூறியுள்ளது.
மறைமாவட்ட தியான மையத்தின் இயக்குநராக பணியாற்றிய ஆயர் பிள்ளை, இந்த நியமனத்தின்போது திருச்சி புனித பவுல் குருமடத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.
புதிய ஆயர் திருப்பொழிவு பெற்று திருச்சபை முறைப்படி ஆயராக பொறுப்பேற்பது வரை ஆயர் அம்புறோஸ் துத்துக்குடி மறைமாவட்ட பாப்பிறை நிர்வாகியாக செயல்படுவார்.
கோட்டாறு மறைமாவட்டத்தில் ஒரு கிராம பங்கில் அருட்தந்தை பிள்ளை 1952ம் ஆண்டு பிறந்தர்ர்.
சென்னை, மதுரை மற்றும் திருச்சியில் குருமடங்களில் கல்வியை முடித்த அவர் 1979ம் ஆண்டு வேலூர் மறைமாவட்டத்திறகாக அருட்தந்தையாக திருப்பொழிவு பெற்றார்.
Add new comment