திரிபுராவில் தொழிலாளர் தினம் பொது விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கம்


தொழிலாளர் தினத்தை பொது விடுமுறை பட்டியலில் இருந்து திரிபுரா மாநில அரசு நீக்கியுள்ளது.

 

.இதற்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

மே மாதத்தின் முதல் நாள், சர்வதேச அளவில் தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த வழக்கத்தை மாற்றி, தொழிலாளர் தினத்தை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து திரிபுரா மாநில அரசு நீக்கியுள்ளது.

 

இந்த முடிவு தொழிலாளர்களுக்கு எதிரானது. தொழிலாளர்கள் குறித்து பாஜகவின் மனநிலைளை காட்டுகிறது என்று பரவலாக கூறப்படுகிறது.

 

இந்த முடிவை திரிபுரா அரசு திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்வதாக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மனிக் டே தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இதுபோன்று நடைபெற்றதில்லை.

Add new comment

5 + 0 =