தினமும் மூவேளை செபம் - அயர்லாந்து வாக்காளர்கள் ஆதரவு


தேசிய ஒளிபரப்பு வலையமைப்பில் தினமும் மூவேளை செபம் செய்வதை நினைவூட்டும் தேவாலய மணிகள் ஒளி மற்றும் ஒலிபரப்பப்பட வேண்டும் என்று அயர்லாந்து வாக்காளர்கள் ஒருமனதாக கடந்த வாரம் வாக்களித்துள்ளனர்.

 

ஐரோப்பா நாடுகள் முழுவதும் மதியமும், மாலை ஆற மணிக்கும் தேவாலயத்தின் மணிகளை ஒலிக்க விடுவது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் பழக்கமாகும்.

 

பள்ளிகளில், களனிகளில், அலுவலகங்களில் மற்றும் வீடுகளில் இந்த நேரங்களில் இருப்போர் அனைவரும் அமைதியாக மூவேளை செபம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, விண்ணேற்பை நினைவு படுத்தும் சிறிதொரு செபம், மரியாளிடம் இறைவேண்டல் செய்வதை நினைவூட்டுவதற்காக இந்த தேவாலய மணிகள் ஒலிக்க விடப்படுகின்றன.

 

1962ம் ஆண்டு தொடங்கி, ஆண்களும் பெண்களும் செபம் செய்வது போன்ற படங்களாக ஓடவிட்டு காட்சிப்படுத்திய ஒரு நிமிட காணொளி மதியமும், மாலை 6 மணிக்கும் தேசிய ஒளிபரப்பு வலையமைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. வானொலியிலும் ஒலிப்பதிவு ஒலிபரப்பாகிறது.

 

இதனை தொடர வேண்டுமா என தேசிய ஒளிபரப்பு வலையமைப்பு வாக்காளர்களிடம் கருத்து கேட்டதற்கு, மூவேளை செபம் செய்ய நினைவூட்டும் தேவாலய மணிகளை தினமும் ஒலிக்கவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.   

Add new comment

1 + 0 =