தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் – தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடும் அரசு


தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தொற்று பாதிப்பு அதிகமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

 

இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைக்கு வரும் 100-ல் 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.  

 

சென்னை, காஞ்சிபுரம், கோவை பகுதிகளில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

 

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 100க்கு மேற்பட்டோருக்கு இந்த காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

தனி வார்டில் இவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

பன்றி காய்ச்சல் மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை ஏ, பி, சி என்ற தனிப் பிரிவில்அனுமதிக்க வேண்டும்.

 

காய்ச்சல், இருமல் மற்றும் சளி பாதிப்பு உடையவர்களை ஏ பிரிவில் அனுமதிக்க வேண்டும்.

 

இவர்களுக்கு போதிய சிகிச்சை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடலாம். இத்தகையோர் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்று இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

உடல் வலி, மூக்கடைப்பு, தொண்டை வலி, வாந்தியால் துன்பப்படுவோருக்கு ஆசெல்டாமிவிர் மாத்திரைகள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடலாம்.

 

கடுமையான காய்ச்சல், மூச்சித்திணறல் மற்றும் பிற அறிகுறிகள் இருப்போர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Add new comment

16 + 3 =