ஜப்பானில் மாயமான தீவு


ஜப்பான் கடற்பகுதியில் இசாம்பே ஹனகிட்ட கொஜிமா என்ற தீவு மாயமாகியுள்ளது.

 

பூகம்பங்கள், சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு வருவது ஜப்பான்.

 

இந்நிலையில், அங்குள்ள தீவு பகுதியில் இசாம்பே ஹனகிட்ட கொஜிமா என்கிற தீவு காணாமலே போயுள்ளது.

 

வடஜப்பானில் உள்ள ஹொக்கய்டோ என்ற தீவிலிருந்து இதனை காணக்கூடியதாக இருந்து வந்தது.

 

கடந்த 1987ம் ஆண்டுதான் இசாம்பே தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

 

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.4 மீட்டர் உயரத்திற்கு வெளியே தெரிந்த இந்த இசாம்பே தீவை, இப்போது எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் தெரியவில்லை.

 

இதனால் ஜப்பான் அரசு, இசாம்பே தீவு கடலில் மூழ்கியதா என்றும், காணமல் போனதற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

இசாம்பே தீவில் மனிதர்கள் இல்லை என்றாலும், அங்கு அதிக கனிம வளங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

 

நிலநடுக்கத்தின் பின்விளைவால், தீவு மூழ்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

Add new comment

6 + 7 =