Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
செபக்கூட தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு திருத்தந்தை செபம்
பீட்ஸ்பர்க்கில் செபக்கூட வழிபாட்டின்போது நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அஞ்சலி செலுத்தி செபித்தார்.
அங்குள்ள யூத சமூகத்தில் தனக்கு நெருக்கமானோரோடு திருத்தந்தை பேசி உரையாடினார்.
மூவேளை செபத்தின்போது, மாட்சிமை தங்கிய இறைவன் இறந்தோரை தனது அமைதியில் இளைபாற செய்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்து, காயமுற்றோருக்கும் ஆதரவு அளிப்பாராக என்று திருத்தந்தை பிரான்சிஸ் செபித்தார்.
மத ரீதியில் தூண்டப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்த திருத்தந்தை பிரான்சிஸ், சமூகங்களில் வளர்ந்து வருகின்ற வெறுப்புணர்வின் வெளிப்பாடுகள் முற்றுபெற வேண்டுமென்று திருத்தந்தை ஜெபித்துள்ளார்.
ஸ்குரில் ஹில்லுக்கு அருகிலுள்ள ட்ரீ ஆப் லைப் செபக்கூடத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற ஓய்வு நாள் வழிபாட்டின்போது, சந்தேக நபர் ராபர்ட் பௌர்ஸ் துப்பாக்கியால் சுட்டதால் 11 பேர் கொல்லப்பட்டனர்.
எல்லா யூதர்களும் சாக வேண்டும் என்று கத்திக்கொண்டே பௌர்ஸ் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
Add new comment