குழந்தைக்கு திருமுழுக்கு கொடுத்து திரும்பிய 7 பேர் சுட்டுக்கொலை


எகிப்தில் குழந்தைக்கு திருமுழுக்கு கொடுத்து திரும்பிய 7 கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய அரசு எனப்படும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

குழந்தைகள் உட்பட 13 பேர் காயம் அடைந்த இந்த கொடூர தாக்குதல், மின்யா மாகாணத்தில் உள்ள காப்டிக் மடாலயத்தில் நிpகழ்ந்துள்ளது.

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர் என்று காப்டிக் தேவாலய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

 

ஐஎஸ் அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

 

விசுவாசம் இல்லாத எகிப்து ஆட்சியில் எங்களுடைய புனித சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் பழிவாங்கவே தாக்குதலில் ஈடுபட்டோம்; இன்னும் ஈடுபடுவோம் என்று இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add new comment

1 + 0 =