கிறிஸ்தவரும் யூத எதிர்ப்பு மனப்பான்மையும்


ஒரு கிறிஸ்தவர்  யூத எதிர்ப்பு மனப்பான்மை உடையவராக இருக்க முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

யூத எதிர்ப்பை கண்டித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஐரோப்பாவில் நடைபெற்ற யூத படுகொலையை நினைவுகூர்ந்து பேசியுள்ளார்.

 

வத்திக்கானில் திங்கள்கிழமை யூத போதகர்களோடு நடத்திய கூட்டத்தின்போது, திருத்தந்தை இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

 

நான் அடிக்கடி பேசியுள்ளதைபோல, ஒரு கிறிஸ்தவர் யூத எதிர்ப்பு மனப்பான்மை உடையவராக இருக்க முடியாது. நாம் ஒரே வேர்களையே கொண்டுள்ளோம் என்று மலையின் உலக மாநாட்டு பிரதிநிதிகளாக வந்திருந்த யூத போதர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

இதற்கு மாறாக, மனித குலத்தில் இருந்து யூத எதிர்ப்பு மனப்பான்மையை அடியோடு ஒழிக்க நாம் உறுதி கொள்ள வேண்டுமென திருத்த்நதை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

காக்கசஸ் மலையை சேர்ந்த முற்கால பாரசீக யூத சமூகத்தை சோந்த இந்த பிரதிநிதிகள், திருத்தந்தை ஒருவரை சந்தித்து கூட்டம் நடத்தியிருப்பது இதுவே முதல்முறை.

Add new comment

3 + 7 =