கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் பண மதிப்பு நீக்க நாள்


பணமதிப்பு நீக்க உத்தரவு வெளியான நவம்பர் 8ஆம் தேதியை காங்கிரஸ் கட்சி கறுப்பு தினமாக அனுசரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது.

 

எனவே, பண புழக்கத்தில் இருந்த மொத்த மதிப்பு ரூ.7.8 லட்சம் கோடியாக குறைந்து வரலாறு காணாத சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

 

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல இந்த நடவடிக்கைக்கு எதிர்த்தன. ஆதரவு தெரிவித்த பல துறைகளும் தாங்கள் ஆதரவு அளித்தது தவறு என பின்னர் தெரிவித்தன.

 

பலரும் இறந்து, தங்களின் பணத்தை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து அல்லலுற செய்த இந்த அறிவிப்பு வெளியான நாளை கறுப்பு தினமாக அனுசரிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

Add new comment

3 + 13 =