கடத்தல்காரருக்கு வழங்கிய குறைவான தண்டனையால் சர்ச்சை


16 வயதான சிறுமியை தவறாக பயன்படுத்தி ஆளை கடத்தியவருக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளதை இந்தோனீசியாவின் ரெய்து தீவுகள் மாகாணத்தின் செயற்பாட்டாளர் கத்தோலிக்க அருட்தந்தை விமர்சித்துள்ளார்.

 

15 ஆண்டுகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென கூறுகின்ற சட்டத்தை அரசு தரப்பு வழங்கறிஞர்கள் முழுமையாக கண்டு கொள்ளாமல் விட்டுள்ளதாக பாங்கால்பியாங் மறைமாவட்டத்தின் நீதி, அமைதி மற்றும் நாடோடிகள், புலம்பெயாந்தோருக்கான மேய்ப்புப்பணி பணிக்குழுவின் தலைவர் அருட்தந்தை கிறிஸ்டான்டுஸ் சாடுர்யுஸ் தெரிவித்திருக்கிறார்.

 

அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு ஜனவரி 31ம் தேதி அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

 

இந்த குற்றவாளிக்கு படாம் மறைமாவட்ட நீதிமன்றம் மிக குறைவான தண்டனை வழங்கி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

 

16 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து, வேலைக்கு அனுப்பி, அந்த சிறுமியின் சம்பளத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக பணம் பறித்து வந்ததாக வீட்டு உதவி முகமையின் தலைவரான ருஸ்னா மீது முனனதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

 

ஆட்கடத்தல் குற்றவாளிக்கு வெறுமனே 18 மாதங்கள் சிறை தண்டனை வழங்குவதை இந்த அரசு தரப்பு வழங்கறிஞர்களால் எவ்வாறு ஒப்புக்கொள்ள முடிந்தது என்பதை எண்ணிபார்க்க முடியவில்லை என்று சாடுர்யுஸ் தெரிவித்திருக்கிறார்.

Add new comment

2 + 0 =