Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலகில் முதல் முறையாக லேசர் அலைகற்றையால் செயற்கை மின்னல்
Sunday, January 13, 2019
உலகில் முதன்முதலாக மேகமூட்டத்தில் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னல் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மின்னலிருந்து மின்சாரம் தயாரிப்பதை சாத்தியமாக்குகின்ற முயற்சியில் அறிவியலாளர்கள் இறங்கியுள்ளனர்.
அறிவியலாளர் பெஞ்சமின் பிராங்களின் மழை நேரத்தில் பட்டம் பறக்க விட்டபோது, மின்னல் வெட்டியதில் பட்டத்தின் நூல் வழியே மின்சாரத்தை உணர்ந்தார்.
அன்று முதல் இன்று வரை பேராற்றல் மிக்க மின்னலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை அறிவியலாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.
இந்நிலையில், தற்போது லேசர் அலைக்கற்றையை கடும் மேகமூட்டத்தில் செலுத்தி செயற்கை மின்னலை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிகழ்வு இயற்பியல் வரலாற்றில் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பயன்படுத்தும் மின்சாரத்தை விட நாற்பது மடங்கு அதிக மின்சாரம் மின்னலில் உள்ளது.
Click to share
Add new comment