இலங்கையில் புதிய வாக்கெடுப்பு நடத்த ஐநா அறிவுரை


இலங்கையில் புதிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. இலங்கை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நீக்கிவிட்டு, இதுவரை போட்டியாளராக இருந்துவந்த மகிந்தா ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணமும் செய்துவைத்தார்.

 

தன்னுடைய பிரதமர் பதவியைப் பறிக்க சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை எனவும், இலங்கையின் பிரதமராக தானே தொடர்வதாகவும் ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார்.

 

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் ரணில் கோரிக்கை வைத்த நிலையில, சிறிசேன நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளார். ரணிலுக்கு வழங்கப்பட்ட பிரதமருக்கான பாதுகாப்பையும் நீக்கி உத்தரவிட்டிருக்கிறார்.

 

நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெருமான்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் சிறப்புரிமைகள் தொடரும் எனவும், அதுவரை ரணில் விக்கிரமசிங்கேவே இலங்கையின் பிரதமராக நீடிப்பார் எனவும் நாடாளுமன்ற சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதினார்.

 

இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட, ஐக்கிய நாடுகள் அவை பொது செயலாளர் அன்றோணியோ குற்றிரெஸ் நாடாளுமன்ற விதிகளை பின்பற்றி கூடிய விரைவில் வாக்கெடுப்பு நடத்துங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

Add new comment

13 + 5 =