இலங்கையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வெற்றி


இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெ்றற நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றிருக்கிறார்.

 

அந்நாட்டு அரசியலில் திடீர் திருப்பமாக ரணில் வெற்றிபெற்றிருப்பது இலங்கை அரசியலில் இன்னும் சில நாட்கள் பரபரப்பை நீடிக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ம்தேதி அதிபர் சிறிசேனா நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

 

ஆனால், தானே பிரதமர் பதவியில் தொடர்வதாக தெரிவித்த ரணில், பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் ரணில் விக்ரமசிங்கே இறங்கினார்.

 

நாடாளுமன்றத்தை கலைத்தல், ஜனவரி 5-ம்தேதி தேர்தல் என அதிபர் சிறிசேன எடுத்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

 

உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது.

 

225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 117 உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

Add new comment

13 + 2 =