இந்திய பங்கில் ஜெர்மனி மறைபரப்பாளர் சிலைக்கு இந்துக்கள் எதிர்ப்பு


இந்திய கத்தோலிக்க தேவாலய வளாகத்தில ஜெர்மனியை சேர்ந்த இயேசு சபை அருட்தந்தை ஒருவரின் சிலை இருப்பதற்கு எதிராக இந்து குழுவின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

இவர் உள்ளூர் மக்களுக்கு எதிராக பணியாற்றினார் என்றும், பழங்குடியின உணர்வுகளை இகழ்ச்சிக்கு உள்ளாக்கினார் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

 

இந்த சிலையை அகற்ற வேண்டுமென பிப்ரவரி 13ம் தேி இந்து மதத்திற்கு ஆதரவான பாரதிய ஜனதா கட்சியின் பழங்குடியின பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

 

அதில், ஜார்கண்டின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குன்றி மாவட்டத்தின் சார்வாடா பங்கின் வளாகத்தில் இருக்கும் அருட்தந்தை ஜான் பேப்டிஸ்ட் ஹோஃப்மானின் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய பிர்சா முன்டா போன்ற உள்ளூர் பழங்குடியின மக்களின் தலைவர்களின் பணிகளுக்கு எதிரானதாக இது இருப்பதால் இந்த சிலையை அகற்ற வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

 

19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களும், அருட்தந்தை ஹோஃப்மானும் பழங்குடியின மக்களின் நாகரிகத்தையும், கலாசாரத்தையும் அழித்தனர். எனவே, அவரது சிலை பழங்குடியின மண்ணில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்த குழு கூறுகிறது.

 

கடந்த டிசம்பர் மாதம் இதற்கான வேலை தொடங்கப்பட்ட நாளில் இருந்து இந்த குழுவினர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.  

Add new comment

5 + 4 =