இந்தியா வெளியேற்றும் கார்பன் அளவு அதிகரிப்பு


2018-ம் ஆண்டு இந்தியா சுமார் 2,299 மில்லியன் டன் அளவு கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றியுள்ளதாக சர்வதேச ஆற்றல் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

 

இந்த அளவு 2017 ஆம் ஆண்டைவிட 5 சதவீதம் அதிகமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. .

 

சர்வதேச அளவில் கார்பன் டை ஆக்சைடு  வெளியிடுவதில் முதல் இரண்டு இடங்களிலுள்ள  அமெரிக்கா, சீனா வெளியேற்றுவதைவிட இது அதிகம்.

 

2018-ம் ஆண்டு உலக அளவில் ஆற்றல் நுகர்வு தன்மை அதிகரித்துள்ளது. இது கடந்த 2010-ம் ஆண்டின் சராசரி அளவைவிட இருமடங்கு அதிகம்.

 

தொடர்ந்து உலகளவில் அதிகப்படியான வெப்ப தன்மையும், குளிர்ச்சி தன்மையும் தேவைப்படுவதால் எரிபொருள் தேவை அதிகரித்திருப்பது இதற்கு காரணமாக அமையலாம் என்று நம்பப்படுகிறது.

Add new comment

1 + 0 =