Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஆசிரியர்களுக்கு அரசு கெடு – பயிற்சி ஆசிரியர்கள் நியமன மிரட்டல்
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஏழு நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வரும் நிலையில், திங்கள்கிழமை மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் தமிழக அரசு கெடு விதித்திருந்தது.
பணிக்கு திரும்பாத பட்சத்தில், அந்த பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார் என அரசு எச்சரித்துள்ளது.
காலக்கெடுவுக்கு பின்னர் பணிக்கு வரும் ஆசிரியர்கள், ஏற்கெனவே பணியாற்றிய இடங்களிலேயே மீண்டும் பணியாற்றுகின்ற உத்தரவாதம் வழங்க முடியாது என்றும், குறிப்பிட்ட வருவாய் மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணிக்கு அனுப்பப்படலாம் என்றும் அரசு கூறியுள்ளது. .
இதனையடுத்து பல ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்ட நிலையில், எல்லா பள்ளிகளும் திறந்திருந்தன. .
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி, சென்னையில் 12 ஆசிரியர்களும், காஞ்சிபுரத்தில் 11 ஆசிரியர்களும், திருவள்ளூரில் 5 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை முதல் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், மொத்தம் ஒரு லட்சத்து 71 ஆயிரம் பேர் நியமிக்கப்படுகிறார்கள். என்றும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ பிடிவாதமாக தெரிவித்து விட்டதால் அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
Add new comment