அரசியல் சாசன மாற்றங்களுக்கு பிலிப்பீன்ஸ் ஆயர்கள் எதிர்ப்பு


பிலிப்பீன்ஸ் அரசியல் சாசனத்தை மாற்றிவிட்டு, மத்திய அரசு அமைப்பு வடிவத்தை கொண்டிருக்க முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக பிலிப்பீன்ஸின் கத்தோலிக்க ஆயர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

 

நாடாளுமன்ற கீழவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த முன்மொழிவு நயவஞ்சகமான விடயம் என்று ஜனவரி 28ம் தேதி வருடத்திற்கு இரு முறை நடைபெறும் ஆயர்களின் கூட்டத்திற்கு பின் வழங்கப்பட்ட மேய்ப்புப்பணி அறிக்கையில் திருச்சபை தலைவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

 

பொது நலத்திற்காக என்ற சாக்குப்போக்கில், தேர்வு செய்யப்பட்ட பல அதிகாரிகளின் பதவிக்கான கால வரையறையை இந்த முன்மொழிவு நீக்கிவிடுகிறது.

 

இவ்வாறு முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் நாட்டின் மூலவளங்களை வெளிநாட்டினர் சொந்தமாக்குவதற்கும், படிப்படியாக அனைத்து கட்டுப்பாடுகளை எடுத்து கொள்ளவும் வழிவகுக்கும் என்று இந்த ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகள் எப்போதும் தாங்களே அதிகாரத்தில் இருப்பதற்கு செய்துகொள்ளும் வழிமுறைதான் இந்த முன்மொழிவு என்று ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

மத்திய அரச அமைப்பை அறிமுகப்படுத்தும் தீர்மானம் ஒன்றை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதிநிதிகள் அவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் அவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் பதவியில் இருக்கும் கால நிர்ணயத்தை இது அகற்றுகிறது.

Add new comment

3 + 6 =