அமெரிக்காவுடன் பேச ரஷ்யா தயார் – புதினின் நேர்மறை அணுகுமுறை


அமெரிக்கா ரஷ்யா இடையிலான பிரச்சனைகளை பேசி தீர்வுக்காண ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

 

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா-ரஷியா இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

 

இதனால்தான் அர்ஜென்டினாவில் சமீபத்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் தவிர்த்துவிட்டார்.

 

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எழுதிய கடிதத்தில், பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷியா தயாராக இருப்பதாக புதின் கூறியு்ளளார்.

 

ரஷியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்துகின்ற முக்கிய காரணி என்று புதின் இதில் வலியுறுத்தி உள்ளார்.

 

மேலும், சிரியா நாட்டு அதிபர் பாஷர் அல் ஆசாதுக்கு புதின் எழுதியுள்ள கடிதத்தில், பயங்கரவாதத்தை எதிர்க்கவும், அந்நாட்டின் இறையாண்மையைக் கட்டிக்காக்கவும் சிரியா அரசுக்கும், மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளை செய்ய ரஷியா உறுதியாக உள்ளதாக புதின் எழுதியுள்ளார்.

Add new comment

2 + 1 =