Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலக காரித்தாஸ் தொண்டு நிறுவனத்தின் புதிய தலைவர் | வேரித்தாஸ் செய்திகள்
உலக அளவில் சேவை மற்றும் உதவிக்கரம் நீட்டுவதில் காரித்தாஸ் உலக அளவில் முன்னணியில் உள்ளது எனபது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
மே 11 முதல் 16 வரை நடைபெற்ற காரித்தாஸ் உதவி அமைப்பின் பொது மாநாடு ரோம் நகரில் நடைபெற்றது. அதில் பேராயர் டார்சிசியஸ் ஐசாவோ கிகுச்சி
உலக அளவிலான கரித்தாஸ் அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பேராயர் ஐசாவோ கிகுச்சியின் தொலைநோக்குப் பார்வை, உலகளாவிய அளவில் பெரிய மாற்றாகவும் பல பிரச்சனைக்ளுக்கு தீர்வாகவும் மனித குலத்திற்கு பல வழிகளில் தொண்டு ஆற்றி வரும் காரித்தாஸை மிக சிறப்பாக வழிநடத்துவதாகும்.
பேராயர் கூறும்போது காரித்தாஸிற்கான எனது பார்வை என்னவென்றால், இந்த தன்னார்வ தொண்டு கூட்டமைப்பு என்பது திருஅவையின் சேவையாகும். மேலும் திருஅவையின் சேவையாக உலகமயமாக்கப்பட்ட இந்த உலகிற்கு தேவையான அனைத்தையும் வழங்க வேண்டும். வறுமை, போர், பசி, அடைப்படை தேவைகள் இல்லாமல் இருக்கும் பல நாடுகளுக்கு குறைந்த பட்ச தேவையான உதவிகளை வழங்கி இறையேசுவின் மதிப்பீடுகள் வழியாக தீர்வுகளை முன்மொழிவதில் முன்னணியில் இருக்க வேண்டும்" என்று பேராயர் RVA ஆங்கில செய்திதொடர்பாளரிடம் கூறினார்.
ஒவ்வொரு நாடும் தன்னிலை மற்றும் தன்னாட்சி அடைந்து சுதந்திர காற்றை சுவாசிக்க தொலைநோக்கு சிந்தனையை அடைய இந்த காரித்தாஸ் தன்னார்வ தொண்டு அமைப்பு வலுவாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒவ்வொரு நாட்டிலும் அமைந்து உள்ள காரித்தாஸும் தன்னாட்சி பெற்று சுதந்திரமாக இருப்பதற்கான சிறந்த திறமை மற்றும் சிறந்த தலைமை கொண்டு செயல்பட வேண்டும், என்று அவர் கூறினார். நற்செய்தி அறிவிப்பின் அடிப்படையில் உண்மையான கூட்டாண்மை அல்லது சகோதரத்துவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு, கரித்தாஸ் ஒரு மிக சிறந்த உதவி நிறுவனம் மற்றும் உண்மையான கத்தோலிக்க திருஅவையின் நாடித்துடிப்பு ஆகும் . இந்த அமைப்பின் முதல் கடமை வறுமையில் வாடும் நாடுகளை கவனித்துக்கொள்ளுதல் மற்றும் போரினாலும் பல இயற்கை சீரழிவு, தீவிரவாதம், செயல் இழந்த அரசு அமைப்பு போன்ற நாடுகளுக்கு அன்பின் அடிப்படையில் அனைத்தையும் உருவாக்கி தரும் தரும் அமைப்பு.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில், உலக அளவில் நடந்து வரும் போர் மற்றும் மனித குலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் போன்ற சமயங்களில் ஒன்றிணைந்து பணியாற்ற ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் கொண்டுவருவதாக அவர் உறுதியளித்தார்.
இந்த ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் கடவுளின் அன்பின் உண்மையான சாட்சியாக மாறுவதற்கும் சகோதரத்துவ ஒத்துழைப்பில் பணியாற்றுவதற்கு இந்த அமைப்பை வழிநடத்த புதிய பொதுச்செயலாளருடன் இணைந்து என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சிப்பேன், என்று பேராயர் கூறினார்.
தன் மீது நம்பிக்கை வைத்துள்ள உலகெங்கிலும் உள்ள அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், ஒரு சிறந்த ஊழியர்-தலைமை என்ற ஒரு முன்மாதிரியை இந்த அமைப்பின் மூலம் அறிமுகப்படுத்த விரும்புகிறேன் என்று கூறினார்.
என்னை நம்பும் உலகெங்கிலும் உள்ள உறுப்பு அமைப்புகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். திருஅவையின் கனிவு மற்றும் அன்பின் அடையாளமாக திகழும் இந்த முக்கியமான கூட்டமைப்பில் ஒரு நல்ல ஊழியர் தலைவராக மாற இந்த அமைப்பு இன்னும் அதிகமாக உலக நாடுகளுக்கு பணி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், என்று பேராயர் கூறினார்.
காரித்தாஸ் அமைப்பு தனது இலக்கை அடைய அடிமட்டத்தில் உள்ள தன்னார்வலர் முதல் உயர் நிர்வாக மட்டத்தில் உள்ள தலைவர் வரை ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்றவும் ஒன்றாக பயணிக்கவும் அழைக்கப்படுகிறார்கள் என்று அவர் தனது உரையில் கூறினார்.
மே 13 அன்று, ரோமில் நடந்த உலக அளவிலான காரித்தாஸ் தொண்டு அமைப்பின் 22வது பொது மாநாட்டில் உலகெங்கும் உள்ள 400 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேராயர் அவர்களை நான்கு வருட காலத்திற்கு இந்த அமைப்பின் புதிய தலைவராகத் தேர்வு செய்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் உதவிக்கரம் நீட்டி இறைபணி ஆற்றி வரும் இந்த காரித்தாஸ் அமைப்பின் புதிய தலைவருக்கு நமது தமிழ்ப்பணி சார்பாக வாழ்த்துக்களும் செபங்களும்.
_ அருள்பணி வி.ஜான்சன்
(News from RVA English News)
Add new comment