திருத்தந்தை பிரான்சிஸ்:ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை | வேரித்தாஸ் செய்திகள்


திருத்தந்தை  பிரான்சிஸ்: திருத்தந்தையின்  பணி எனது வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்  என்று நான் நம்புகிறேன்'
இந்த மாதம் ஆப்பிரிக்காவில் உள்ள இயேசு சபை குருக்களுடன் நடைபெற்ற  இரண்டு உரையாடல்களில் திருத்தந்தை பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வியை மீண்டும் ஒருமுறை எழுப்பப்பட்டது அதில்  உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின்  ஊழியம்  ‘ad vitam'' என்று நான் நம்புகிறேன். அதாவது என்றும் மாறாதது அது  ஏன் குறிப்பிட்ட காலமாக இருக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை நான் தேடவில்லை என்று திருத்தத்தை பிப்ரவரி 2 அன்று காங்கோ ஜனநாயகக் குடியரசில் 82 இயேசு சபை குருக்களுடன் நடந்த  ஒரு தனிப்பட்ட உரையாடலின் போது கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் தனது ஜனவரி 31- முதல் பிப்ரவரி தொடக்க காலத்தில் தான் தங்கியிருந்த கின்ஷாசாவில் உள்ள அப்போஸ்தலிக்க குருக்கள் குழுவை சந்தித்தார். 

இந்த உரையாடல்கள் இயேசு சபை குருக்கள்  நடத்தும் லா சிவில்டா கத்தோலிகா இதழில் பதிவாகியுள்ளன .

திருத்தந்தை  முந்தைய நேர்காணலில் அவர் வெளிப்படுத்திய தகவலை மீண்டும் மீண்டும் கூறினார், அவர் திருத்தந்தையாக  தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் உடல் நலம் குன்றி இயலாமைக்கு ஆளாக நேரிடும் பட்சத்தில் ராஜினாமா செய்வேன் என்று கடிதத்தில் கையெழுத்திட்டு அந்தக் கடிதத்தை அப்போது வத்திக்கானின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கார்டினல் டார்சிசியோ பெர்டோனிடம் கொடுத்ததாகவும், ஆனால் அந்தக் கடிதம் எங்கே என்று இப்போது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், திருத்தந்தை பதவியை ராஜினாமா செய்வது ஒரு சாதாரண விஷயமாக மாற வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. மரணித்த முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் தனது உடல்நிலை காரணமாக திருத்தந்தையாக தொடர விரும்பாததால் ராஜினாமா  செய்ய தைரியம் இருந்தது. இப்போதைக்கு எனது நிகழ்ச்சி நிரலில் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணம்  இல்லை, ”என்று அவர் கூறினார்.

"நம் முன்னோர்களின் பணிகள் எப்போதும் வாழ்க்கைக்கானது" "மற்றும் வரலாற்று பாரம்பரியம் முக்கியமானது." என்று கூறிய அவர் 
திருச்சபை கிசுகிசுக்களுக்கு செவிசாய்த்தால், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும்  ஒரு முறை திருத்தந்தையை  மாற்ற வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

பிப்ரவரி 3-5 தேதிகளில் அவர் பயணம் செய்த தெற்கு சூடானில் உள்ள இயேசு சபை குருக்களுடனான  சந்திப்பில் திருத்தந்தை  மீண்டும் தனது ராஜினாமா குறித்த கேள்வியை எதிர்கொண்ட பொழுது "இல்லை, [இராஜினாமா] என் மனதில் தோன்றவில்லை" என்று திருத்தந்தை பிரான்சிஸ் குழுவிடம் கூறினார். மேலும் திருஅவைக்கு பணி செய்வது எனபது வாழ்நாள் பணி என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

(source and image from catholic news agency )
-அருள்பணி. வி. ஜான்சன் 

Add new comment

1 + 4 =