
1. பேரன்பும் பேரழகும்
காண்போர் மனதை கொள்ளை கொள்ளும்வண்ணம் தனது பேரன்பை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளி சிறுவன்
மதுரையில் கடந்த 10ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் சூ .வெங்கடேசன் தலைமையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும், நிகழ்ச்சியில் தனக்கு மட்டும் இன்றி பிறருக்கும் உதவிகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணிய சிறுவனின் மாண்பு.
மதுரை மாநகரில் மேலூரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு மதுரையின் பல பகுதிகளில் இருந்து எண்ணற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு சிறுவன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தான். தருண்சோலை அறிவுசார் குறை உடைய சிறுவன் மேலூரில் இருந்து தனது தாயுடன் அடையாள அட்டை பெறுவதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தபோது அங்கு இருந்த அனைவருடனும் பாசத்துடன் பழக ஆரம்பித்துவிட்டான். இவர்களோடு காவ்யா என்ற அறிவுசார்க்குறைபாடு உடைய மற்றொரு சிறுமியும் தனது தாயுடன் வந்து இருந்தார். அடையாள அட்டை பெறும்போது நாடாளுமன்ற உறுப்பினர்க்கு மிக மகிழ்ச்சியுடன் நன்றி கூறியது மட்டும் அல்லாமல் தனது தோழி காவ்யாவிற்கும் அடையாள அட்டை கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சூ. வெங்கடேசனிடம் கோரிக்கை வைத்தது அங்கு வந்து இருந்த அனைவர்க்கும் ஆச்சரியமாகவும்
ஆனந்தமாகவும் இருந்தது. மேலும் இதனை கண்ட அனைவர் கண்களும் கண்ணீரால் நிரம்பியது.ஒரு அறிவுசார் குறைபாடு கொண்ட குழந்தை தான் பெற்றுக்கொண்ட அடையாள அட்டைக்கு நன்றி கூறியது மட்டும் அல்லாமல் தன்னைப்போல இருக்கின்ற குழந்தைக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வைத்த கோரிக்கை இவை எல்லாம் பார்க்கும்போது நாமும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதையும் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் மாற வேண்டும் என்றும் நமக்கு உணர்த்தியுள்ளான் இந்த சிறுவன்.
Source: Twitter
Add new comment