ஜமால் கஷோகி உடல் சௌதி தூதரக அதிகாரியின் இல்லத்தில் எரிப்பு


ஜமால் கஷோகி உடல் சௌதி தூதரக அதிகாரியின் இல்லத்தில் எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் அல்- ஜசிராவின் விசாரணையில் சௌதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் துருக்கியிலுள்ள சௌதி தூதரக அதிகாரியின் வீட்டில் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

 

ஆனால், துருக்கியில் கொல்லப்பட்ட சௌதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இறுதியில் உண்மை கண்டறியப்படும் என்றும் சௌதி வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

 

சௌதி அரசை விமர்சித்து வந்த பத்திரிகையாளரான ஜமால் துருக்கியில் உள்ள சௌதி தூதரகத்தில் அக்டோபர் 2-ம் தேதி கொல்லப்பட்டார்.

 

சௌதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளது இதன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இந்தக் கொலை குற்றத்தை துருக்கி அரசு விசாரிக்க சௌதி அனுமதி அளிக்காமல் 13  நாட்கள் தாமதப்படுத்தியது என்று  ஐநா அறிக்கையில் கூறியிருந்தது.

Add new comment

6 + 5 =