பொறுப்பேற்றார் தூத்துக்குடி மறைமாவட்ட ஏழாவது ஆயர்


தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஏழாவது புதிய ஆயராக ஸ்டீபன் அந்தோணி திருப்பொழிவு பெற்றுள்ளார்.

 

இதற்கான சிறப்பு கூட்டு திருப்பலியில் மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி உள்பட பல ஆயாகளும், தூத்துக்குடி, வேலூர், கோட்டாறு ஆகிய மறைமாவட்டங்களின் பங்குத் தந்தைகளும் அருள்சகோதரிகளும் திரளான பொதுநிலையினரும் கலந்து கொண்டனர்.

 

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சிஎஸ்.ஐ பேராயர் தேவசகாயம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன், மறைமாவட்ட செயலாளர் அருட்தந்தை நார்பர்ட், மறைமாவட்ட பொருளாளர் அருட்தந்தை சகாய ஜோசப், மறைவட்ட அதிபர் ரோஸ்லின், அருள்தந்தை தினேஷ் பங்கு பேரவையினர் அன்பியங்கள் செய்தி தொடர்பாளர் அருட்தந்தை ஜேம்ஸ் விக்டர், ரெடம்பர் ஆகியோர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

Add new comment

5 + 0 =