திருத்தந்தை பிரான்சிஸூக்கு இரண்டு படுகொலை மிரட்டல்கள்


திருத்தந்தை பிரான்சிஸூக்கு எதிராக இரண்டு படுகொலை மிரட்டல்களை ஐஎஸ்எஸ் ஆதரவு ஊடக குழு ஒன்று வழங்கியுள்ளது.

 

வத்திக்கானுக்கும், கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான வன்முறை தீவிரவாத குழுவாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

சிலுவையின் அடிமைகள் என்று கூறி கடந்த வாரம் விடுக்கப்பட்ட மிரட்டல் சுவரொட்டி படத்தில், அவுஸ்டிச் இறப்பு சுவரை திருத்தந்தை பார்த்து கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு பின்னால் தீவிரவாதி பதுங்கியிருப்பது போல அச்சிடப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 

இரண்டாவது மிரட்டலில், அவுஸ்டிச் இறப்பு சுவரை திருத்தந்தை பார்த்து கொண்டிருக்கும் நிலையில், அவரை நோக்கி துப்பாக்கி குறி வைக்கப்படுவது போலவும் அச்சிடப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

“எங்கள் தாக்குதல்களில் இருந்து நீங்கள் தொலைதூரத்தில் இருப்பதாக எண்ணுகிறீர்களா?” என்று அந்த படத்தின் மீது எழுதப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கிறிஸ்மஸ் விழா நேரத்தில் ரத்தம் சிந்தப்படும் என்று உறுதிமொழி வழங்கி, ஆயுதங்கள் நிறைந்த வாகனம் வத்திக்கானை நோக்கி நகர்ந்து வருவதுபோல மிரட்டல் விடுக்க்பபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Add new comment

5 + 3 =