Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஜமால் கசோஜி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- ஐநாவின் முதல் கட்ட அறிக்கை
பத்திரிகையாளர் ஜமால் கசோஜி சௌதி அதிகாரிகளால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஐ.நா.குழு நடத்திய விசாரணையில் வெளியான முதல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியிலுள்ள சௌதி அரேபிய தூதரகத்திற்கு சென்றபோது கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக மேற்கொண் விசாரணையின் விவரங்களை ஐக்கிய நாடுகள் சபை முதல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
சௌதி அரேபிய அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமால் கசேஜியை கொலை செய்துள்ளனர். துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிப்பதற்கு அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் சௌதி அரேபியா தாமதப்படுத்தியுள்ளது என்ற ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், ஜமால் கசோஜியை கொல்ல முன்னரே திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
சௌதி அரசை விமர்சிப்பதை ஜமால் கசோஜி நிறுத்த வேண்டும். இல்லையேல் புல்லட் பயன்படுத்தப்படும் என்று முகமது பின் சல்மான் கூறியதாக செய்திகள் வெளியாகின.
ஜமால் கசோஜி சௌதி அரேபியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர்.
1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து எழுத்துப் பணியைத் தொடங்கி நடத்தி வந்தவர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சௌதி அரசையும், அதனுடைய மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.
இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று முதலில் கூறிய சௌதி அரசு சாட்சியங்கள் வலுவாக இருந்ததைத் தொடர்ந்து ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த கொலையோடு இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்துவிட்டது.
Add new comment