தொற்றாத நோய்களால் இறக்கும் 70 விழுக்காட்டினர்


தொற்றாத நோய்களான கேன்சர், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளால் உலகம் முழுவதும் 70 விழுக்காட்டினர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 4.1 கோடி மக்கள் பலியாவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

தென் கிழக்கு ஆசியப் பகுதியில், தொற்றாத நோய்களான கேன்சர், நீரிழிவு, இதயம் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் 85 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது. .

 

உலக அளவில் காணப்படும் காய்ச்சல், பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு ஆகியவற்றால் நிகழும் இறப்புகளின் விகிதம் குறைந்துள்ளது.

 

ஆனால், தொற்றாத நோய்களால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இறப்பவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு  70 வயதுக்கு முன்னதாக இறந்துவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

புகையிலைப் பயன்பாடு, உடல்நலத்துக்கு ஒவ்வாத உணவுமுறை, போதுமான அளவு உடல் செயல்பாடுகள் இல்லாமை, அதீத மதுப்பழக்கம் ஆகிய ஆபத்தான 4 பழக்கங்களால், கேன்சர், நீரிழிவு, இதயம் மற்றும் சுவாச நோய்கள் வருவதாக கூறப்படுகிறது.

Add new comment

1 + 2 =