ரயில் பயணங்களை தவிர்க்க முஸ்லிம் பள்ளி அறிவுரை


ஜனவ்ரி 26 குடியரசு தினத்தில் தொடர்வண்டி பயணங்களை தவிர்க்க வேண்டுமென உத்தர பிரதேசத்தின் தியோபந்த் மதரஸா (முஸ்லிம் பள்ளி) மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

 

சுற்றறிக்கை மூலம் இந்த அறிவுரை வெளியிட்டுள்ளது.

 

உலகப்புகழ் பெற்ற மதரஸாவான தாரூல் உலூம் மாணவர் விடுதியின் காவலரான மவுலானா முனீர் ஒரு சுற்றறிக்கையில் இதனை வெளியிட்டுள்ளார்.

 

ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. காவல்துறையினர் முக்கிய இடங்களில் கூடுதலான சோதனை நடத்துகின்றனர்.

 

அதன் காரணமாக, பலரும் சித்ரவதைக்கு உள்ளாகி அச்சுறுத்தலான சூழல் உருவாகிறது என்று இந்த சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தற்போதைய பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், மத சிறுபான்மையினர் பாதுகாப்பில்லாத நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று ஆய்வுகளும், பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றன.

 

இந்த பின்னணியில் இந்த மதராஸா மாணவருக்கு வழங்கியுள்ள அறிவுரை வந்துள்ளது.  

 

 

மேலும், மதரஸாவில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் தாடியும், தொப்பியுமாக காணப்படுவது வழக்கம். இந்த தோற்றத்தில் உள்ளவர்களிடம் பாதுகாப்பு படையினர் பெரும்பாலும் கூடுதலான சோதனை நடத்துகின்றனர்.

 

இதனை மனதில் வைத்தே இந்த அறிவுரை கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

3 + 2 =