ஜல்லிக்கட்டில் கின்னஸ் சாதனை


தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

 

தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்த இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையில், சாதனை முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

ஆயிரத்து 353 காளைகள் வாடிவாசல் வழியாக  சீறிப்பாய்ந்தன.

 

600 ஜல்லிக்கட்டு வீரர்கள் காளைகளை பிடித்தனர்.

 

இதைத் தொடர்ந்து கின்னஸ் அமைப்பின் உறுப்பினர்கள், கின்னஸ் சாதனைசான்றிதழை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் விழாக் குழுவினரிடம் வழங்கினர்.

 

துணை முதலமைச்சர் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்ட இந்த ஜல்லிக்கட்டில், சிறப்பாக விளையாடிய காளை மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தலா ஒரு கார் பரிசளிக்கப்பட்டது.

Add new comment

2 + 0 =