சபரிமலை விவகாரத்தால் ஸ்தம்பிககும் கேரளா – 750 பேர் கைது


சபரிமலையில் 50 வயதுக்கு குறைவான இரண்டு பெண்கள் கடந்த புதன்கிழமை சாமி தரிசனம் செய்ததை அடுத்து, அங்கு போராட்ங்கள், வன்முறைகள் ஏற்பட்டு சுமார் 750 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.

 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் நுழைய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன.

 

சபரிமலையிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் தடை செய்யப்பட்ட வயதுடைய பல பெண்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர்.

 

ஆனால் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய 2 பெண்கள் புதன்கிழமை அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர்.

 

இதனை கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனும் உறுதி செய்தார்.

 

சபரிமலையில் 50 வயதுக்கு குறைவான பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா முழுவதும் வியாழக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

 

காலை 6 மணியளவில் தொடங்கிய இந்த 12 மணிநேர போராட்டத்தால், பல இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

 

கோழிக்கோட்டில் போராட்டக்காரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தியும், டயர்களை தீ வைத்து எரித்தனர்.

 

போலீஸ் வாகனங்கள், அரசு பஸ்கள் மீது கற்களை வீசி தாக்கினர். சில கடைகள் அடித்தும் நொறுக்கப்பட்டன.

 

பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

 

வன்முறையில் 30 போலீசார் காயமடைந்தனர்.  இதுவரை 750 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 

இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க. ஆதரவு தெரிவித்திருந்தது.  ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி நேற்று கருப்பு நாளாக கடைப்பிடித்தது.

 

வன்முறை சம்பவங்கள் எதிரொலியாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Add new comment

18 + 2 =