நடக்க அவதிப்படும் விண்வெளி வீரர்


விண்வெளியில் 6 மாதங்களும் 17 நாட்களும் தங்கிவிட்டு பூமிக்கு திரும்பிய நாசாவின் விண்வெளி வீரர் பூமியில் நடக்க முடியாமல் அவதிப்படும் காணொளி வெளியாகியுள்ளது.

 

அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து ஆய்வுகளை நடத்தி வருகின்றன.

 

விண்வெளியில் இருக்கும் இந்த ஆய்வு மையத்திற்கு விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்வதற்காக சென்று திரும்பி வருகின்றனர்.

 

நாசாவைச் சேர்ந்த பியூஸ்டல் என்ற விண்வெளி வீரர் 6 மாதங்களும் 17 நாட்களும் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம்  சென்று திரும்பியுள்ளார்.

 

 

கடந்த மே மாதம் சென்ற அவர் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வை முடித்து விட்டு அக்டோபர் மாதம் பூமிக்கு திரும்பினார்.

 

புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் மிதந்துகொண்டே இருந்துவிட்டு பூமிக்கு வந்ததும் நடக்க கஷ்டமாக இருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார்.

 

பூமிக்குத் திரும்பியதும் நாசா விஞ்ஞானிகள் முன்னிலையில் கண்ணை மூடிக்கொண்டு நடக்க முயன்ற அவர் இயல்பாக நடக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

 

அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர்களுக்கு பூமிக்கு வந்ததும் சில நாட்கள் நடப்பது கஷ்டமாக இருக்கலாம் என்றும்,  உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Add new comment

2 + 1 =