Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மதம் மாறிய பழங்குடியினரின் சலுகைகளை நீக்க ஜார்கண்ட் முயற்சி
பாரம்பரிய சார்னா மதத்தை விட்டுவிட்டு பிற மதங்களில் சேர்ந்து விட்ட பழங்குடி மக்களுக்கு ‘பழங்குடியினர்’ என்ற தகுதியை நீக்கிவிட ஜார்கண்ட் மாநில அரசு எடுத்து வருகின்ற நடவடிக்கை தொடர்பாக இந்தியாவிலுள்ள கத்தோலிக்க பழங்குடியின தலைவர்கள் கவலை அடைந்து்ளளனர்.
இந்தியாவின் கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலத்தின் நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் சமூக சலுகைகளை ஆயிரக்கண்ககான பழங்குடியினர் இழந்துவிடுவர்.
அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற மாநில மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மததின் அடிப்படையில் பழங்குடி மக்களை பிரிவுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட முயற்சி இதுவென சிம்டிகா மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் பார்வா கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ள நிலையில், அவ்வாண்டின் இறுதியில் மாநில சட்டப்பேரவை தேர்தலும் ஜார்கண்டில் நடைபெறவுள்ளது.
ஜார்கண்டில் ஆட்சி புரிந்து வருகின்ற பாரதிய ஜனதா கட்சி, இந்த நடவடிக்கையை இந்திய பிரதமர் நரோந்திர மோடி வகுக்க வேண்டுமென விரும்புவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன்.
அரசின் இத்தகைய நடவடிக்கை பேரழிவாக அமையும். அது தொடர்பாக மேம்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று பழங்குடியின மக்களுக்கான இந்திய ஆயாகளின் அலுவலகத்தின் தலைவர் ஆயர் பார்வா கூறியு்ளளார்.
அந்த பிரச்சனை தொடர்பாக அரசு அரசியல் ஆதாயங்களை எதிர்பார்ப்பதாக பழங்குடியினரின் பான்-இந்தியா குழுவை வழிநடத்தி வருகின்ற தேவ் கமார் தான் என்பவர் தெரிவித்துள்ளார்.
மதங்களின் அடிப்படையில் மக்களை பிரிக்கும் இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று இவர் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.
Add new comment