ஏலியன்கள் பூமியில் வந்துவிட்டனவா?


ஏலியன்கள் பூமிக்கு வந்துவிட்டதாகவும். நாம்தான் அவற்றை அறியாமல் இருப்பதாகவும் பேராசிரியர் சில்வானோ பி கொலொம்பனோ கூறியுள்ளார்.

 

ஏலியன்கள் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தில் கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக இருப்பவர் பேராசிரியர் சில்வானோ பி கொலொம்பனோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

மனிதர்களின் எதிர்பார்க்காத உருவத்தில் ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கலாம். கார்பனால் உடல் உறுப்புகளைக் கொண்ட ஏலியன்களை மனிதர்களால் எளிதில் அடையாளம் காண முடியாமல் போய்விடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

 

விஞ்ஞானிகள் தங்களடைய பழைய அனுமானங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ஏலியன்களின் பல்வேறு குணநலன்களை கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டுமென சில்வானோ வலியுறுத்துகிறார்.

Add new comment

4 + 1 =